shadow

நியூசிலாந்தில் இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்

நியூசிலாந்து நாட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த வீரர் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் சங்கனாச்சேரி என்ற பகுதியை சேர்ந்த ஹரீஷ் கங்காதரன் என்ற 33 வயது நபர் நியூசிலாந்தில் பணிபுரிந்து கொண்டே, கிரீன் ஐலேண்ட் கிளப்புக்கு கிரிக்கெட் விளையாடி வந்தார். மேலும் இவர்தான் அந்த அணியின் துணை கேப்டன் என்பதும் இந்த அணியில் பெரும்பாலும் இந்தியர்கள் தான் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஹரிஷ் விளையாடி கொண்டிருதபோது திடீரென தனக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருப்பதாக கூறிக்கொண்டே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரான சங்கனாச்சேரியில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது

Leave a Reply