நினைத்ததை சாதித்து விட்டது திமுக: உள்ளாட்சித் தேர்தல் ரத்தா?

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற போது மறு வரையறை செய்யப்படாத 9 தொகுதிகளுக்கு மட்டும் தேவைப்பட்டால் தேர்தலை நிறுத்த தமிழக அரசு சார்பில் ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அடுத்து இன்று மாலை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மறு வரையறை செய்யப்படும் வரையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என்ற திமுக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது திமுகவுக்கு சாதகமாகவே வழக்கு சென்று கொண்டிருப்பதாக கருதப்படுகிறது

எனவே இந்த வழக்கின் தீர்ப்பில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்ய உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் திமுக இந்த தேர்தலை சந்திக்க தயக்கம் காட்டி வருவதாகவும், இதனையடுத்து இந்த வழக்கு தொடுக்கபட்டதாகவும் குற்றம்சாட்டி வரும் நிலையில் திமுக தான் நினைத்ததை சாதித்து விட்டதாக ஆளும் கட்சி தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது

Leave a Reply