நாளை வெளியாகிறது சூர்யாவின் ‘தண்டல்காரன்’
சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது
யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த பாடல், ‘தண்டல்காரன்’ என்று ஆரம்பிக்கும் பாடலாக இருக்கும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இதுவரை இந்த வார்த்தையில் ஒரு பாடல் ஆரம்பித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யாவு, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் ஒரு அரசியல் அதிரடி படம் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.