நாளை முதல் அரசு வங்கிகள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நாளை இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை என்பதும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதும் தெரிந்ததே
ஆனால் மார்ச் 15ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் சங்கம் போராட்டம் செய்கின்றன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் போராட்டம் செய்வதால் அரசு வங்கிகள் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் இயங்காது
இதனை அடுத்து சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் ஆகிய நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.