நாளை முதல் படிப்படியாக மழை குறையும்: வானிலை மைய இயக்குனர்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்ந்ததை அடுத்து நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த பருவமழையால் பெரும்பாலான ஏரிகள் நிறைந்துவிட்டதால் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.