shadow

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது

இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு செயல்படுத்தப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு அளிக்க மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்து உள்ளது

இதற்கான அறிவிப்பு சற்று முன் வெளியான நிலையில் அம்மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்