நாளை தடையை மீறி போராட்டம்: தலைமைச்செயலகத்தில் பரபரப்பு
நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் மார்ச் 11ஆம் தேதி வரை போராட்டம் நடத்த அனுமதி இல்லை என சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் தடையை மீறி நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திட்டமிட்டபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் எனவும் இந்த போராட்டம் அமைதி வழியில் இருக்கும் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளது
இதனை அடுத்து இன்று இரவு முதலே தலைமைச் செயலகத்தில் வழக்கத்தைவிட அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.