shadow

நாளை இந்தியா – இலங்கை டெஸ்ட் போட்டி ஆரம்பம்: வெற்றியை துவக்குவது யார்?

இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 100% வெற்றியை பெற்று நாடு திரும்பியுள்ள நிலையில் தற்போது இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்த இரு அணிகள் நாளை கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன

கொல்கத்தா ஆடுகளத்தில் 6மிமீ வரை புற்கள் இருக்கும் மைதானம் என்பதால் சுழற்பந்து, வேகப்பந்து இரண்டுக்கும் சாதகமான மைதானமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த டெஸ்ட் போட்டியில் பவுலர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது

இந்திய அணியை பொருத்தவரையில் அஸ்வின், பும்ரா, புவனேஷ்குமார் என ஃபார்மில் உள்ள பந்துவீச்சாளர்கள் இருப்பதால் முதல் டெஸ்ட்டை இந்தியா கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply