நாளை அதிமுக பொதுக்குழு: சென்னை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் அணியின் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ததோடு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த வெற்றிவேல் எம்.எல்.ஏவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
பொதுக்குழு நடத்த நீதிமன்றம் தடை விதிக்காததால் நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என்றும் இந்த பொதுக்குழுவில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.