நாம் தமிழர் பெற்ற ஓட்டுக்களை கூட காங்கிரஸ் பெறாது: சீமான்

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சி பெற்ற ஓட்டுகளை கூட வாங்க முடியாது என சீமான் விமர்சனம் செய்துள்ளது காங்கிரஸார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கிட்டத்தட்ட பிரிந்துவிட்டதாகவே கருதப்படும் நிலையில் காங்கிரஸ் தனித்து நின்றோ அல்லது புதிய கூட்டணி அமைத்தோ போட்டியிட்டால் அக்கட்சியால் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் தனித்து நின்றால் நாம் தமிழர் கட்சி பெற்ற ஓட்டுகள் கூட வாங்க முடியாது எனவும், வருங்காலங்களில், திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றும் புதியதாக வருபவர்கள் தங்களுடன் இணைந்து பயணிக்க விரும்பினால், கூட்டணி அமைக்கப்படும் என்றும் சீமான் தெரிவித்தார்.

Leave a Reply