shadow

நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; சிம்பு

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு ரூ.20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நஷ்டத்திற்கு காரணம் சிம்புவே என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு சிம்பு தனது பாணியில் பதிலளித்திருக்கிறார்.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்து சிம்பு கூறியபோது, ‘ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கும் போது, அதன் தயாரிப்பாளர் புகார் கூறினால், அதற்கு நான் பதிலளிக்க தயார். ஆனால் அந்த படம் நடித்து வெளிவந்த பல மாதங்கள் ஆன பின்னர் என் மீது குற்றம் சுமத்துவது தவறு. அவருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த சட்டமும் இல்லை. அப்படி புகார் அளித்தால், அதை விசாரிக்கும் போது பதில் கூறுவேன்’ என்று சிம்பு தெரிவித்துள்ளார்

இயக்குனர் ஆதிக் எழுதி வைத்த கதையே வேறு என்றும், சிம்பு இயக்குனர் நினைத்தபடி படம் எடுக்கவிடாமல் அவருடைய இஷ்டப்படி கதையை மாற்றினார் என்றும் இயக்குனர் ஆதிக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply