நான் யாருக்கும் எதிரியாக இருக்க மாட்டேன்: ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் அபார வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் யாருக்கும் எதிரியாக இருக்க மாட்டேன், மக்களின் பாதுகாவலனாக இருப்பதே என் கடமை. அடுத்த ஓராண்டில் நாட்டின் முன் மாதிரி மாநிலமாக ஆந்திராவை மாற்றிகாட்டுவேன். பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவேன் என ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி பேட்டியின்போது கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.