நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல: திருமாவளவன்
நான் இந்துகளுக்கு எதிரானவன் என்று அவதூறு பரப்பி வருவதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திப், பேராசிரியர்கள் ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளதாகவும், இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் நான் இந்துகளுக்கு எதிரானவன் என்று ஒருசிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், பாஜக மற்றும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நான் முன்வைக்கும் கருத்துகளை இந்து சமுதாயத்திற்கு எதிராக பேசுவது போன்று உருவாக்குகின்றனர் என்றும், அவர்கள் எண்ணம் பலிக்காது என்றும், நான் என்றுமே இந்துகளுக்கு எதிரானவன் அல்ல என்றும், என்னை பின்பற்றுவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்துக்கள்தான் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அதனுடைய துணை நதியில் அணை கட்ட அனுமதி அளித்துள்ளதற்கு உடனடியாக மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.