நான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது! சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே….


செப்டம்பர் 26. 27 ஆகிய இருதினங்களில் வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதால் வங்கிப்பணிகள் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.

இந்த போராட்டத்தால் வங்கிகள் திறந்திருக்கும், வங்கி ஊழியர்களும் வேலைக்கு வருவார்கள் என்றாலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் உத்தரவிட அதிகாரிகள் இல்லாமல் முக்கியப் பணிகள் முடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

குறிப்பாக வங்கி அதிகாரிகள் உத்தரவின் பேரில்தான் ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படும் செப்டம்பர் 26. 27 ஆகிய இருதினங்களில் போராட்டம் அதனையடுத்து 28, 29 ஆகிய இரு தினங்கள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் ஏடிஎம்களில் பணம் நிரப்ப வங்கி அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வர வாய்ப்பு குறைவு என்பதால் ஏடிஎம்களில் பணம் காலியாக வாய்ப்பு உள்ளது.

எனவே வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தேவையான பணத்தை செப்டம்பர் 25ஆம் தேதியே எடுத்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply