நானும் லாஸ்லியாவும் இருப்பது யாருக்குமே பிடிக்கலை: கவின் புலம்பல்

பிக்பாஸ் வீட்டில் நேற்று காப்பாற்றப்படுவர்கள் யார் யார்? என்பது குறித்த கேள்வியை பிக்பாஸ் கேட்ட போது ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த இரண்டு நபர்களின் பெயர்களை கூறி விட்டு இரண்டு பச்சை மிளகாயை சாப்பிட்டு சென்றனர்

அந்த வகையில் கவின் கன்பக்சன் அறைக்கு வந்து கூறியபோது ’நேற்று இந்த வீட்டில் யார் காப்பாற்றப் படவேண்டும் என்ற கேள்விக்கு ஒருவர்கூட என்னையும் லாஸ்லியாவின் கூறவில்லை. எனவே நானும் லாஸ்லியாவும் இந்த வீட்டில் இருப்பது மற்ற போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டதாகவும் அதனால் நானும் லாஸ்லியாவும் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்

கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் செய்யும் காதல் சேட்டைகள், ஓவர் அலட்டல்கள் போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சல் படுத்தியுள்ளது. இருப்பினும் இருவரும் வாக்கெடுப்பில் ஒவ்வொரு வாரமும் தப்பித்துக் கொண்டே இருப்பது பெரும் அதிசயமாக உள்ளது

Leave a Reply