நாட்டு மக்களுக்கு மோடி கூறிய முக்கிய விஷயம்!

பிரதமர் மோடி சற்றுமுன் தனது டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய விஷயம் கூறவிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இந்தியா விண்வெளி துறையில் செய்த சாதனை குறித்து அவர் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது. அதாவது விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனை ஒன்றில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளித்துறையில் இந்த சாதனையை படைத்துள்ளது

நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மிஷன் சக்தி’ சோதனை இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply