மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் ஆகிய மூன்று மாதத்தில் எந்த மாதத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்குமாறு பொதுமக்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது
இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை வரும் 20-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மனித மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
பொதுமக்களின் கருத்தை கேட்ட பிறகே பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த முடிவை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.