நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஃபேஸ்புக் சி.இ.ஓ ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ ஜாக் டார்சி மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
பிப்ரவரி 25ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ட்விட்டர் சிஇஓ ஜாக் டார்சி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த தேதியில் ஆஜராக டுவிட்டர் சிஇஓ ஜாக் டார்சி மறுத்துவிட்டர். அவருக்கு பதிலாக நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் டுவிட்டரின் பொதுச்சேவை துணை தலைவர் கோலின் இக்கோரோவில் ஆஜராகவிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜாக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.