நாடாளுமன்றத்தில் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமி

நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘வைகோவை நாடாளுமன்றத்தில் பார்த்ததும் ஓடிச் சென்று வாழ்த்து தெரிவித்தேன். அவரும் பத்திரிகையாளர்களிடம் என்னை பற்றி நல்லவிதமாகவே கூறினார். ஜனநாயகத்தில் பண்பாடு என்பது அவசியமானது. அரசியல் சட்டம் என்பதும் புனிதமானது இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தனது டுவீட்டில் பதிவு செய்துள்ளார்.

 

Leave a Reply