நாஞ்சில் சம்பத் வேன், கண்ணாடி உடைப்பு: பெரும் பரபரப்பு

மதிமுக, அதிமுக, அமமுக உள்பட கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த நாஞ்சில் சம்பத் தற்போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த திமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத் வேன் கண்ணாடியை அதிமுகவினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாஞ்சில் சம்பத் வேன் கண்ணாடியை உடைத்த அதிமுகவினர்களை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply