நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்கு ரூ.20 கோடி வாங்கினார் ஸ்டாலின்: அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’20 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு காங்கிரசுக்கு நாங்குநேரி தொகுதியை ஒதுக்கியவர் ஸ்டாலின் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தலைவரும், காங்கிரஸ் கட்சியும் என்ன பதிலடி கொடுக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply