shadow

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்? பிரபல நடிகை கொடுத்த முக்கிய வாக்குறுதி!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருப்பதியில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ நடிகை ரோஜா வாக்குறுதி கொடுத்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே இருந்த தொன்மை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுவதற்காக அமராவதி ஜகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு ஆசீர்வதிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை சந்திரபாபு நாயுடு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இடித்து தரைமட்டமாக்கினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதே இடத்தில் மீண்டும ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்.

மேலும் நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சந்திரபாபு நாயுடு, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி வருகிறார். இது உயிரிழந்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று கூறினார்.,

Leave a Reply