நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க தடையில்லாச் சான்று வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது
இந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து இன்னும் நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் இந்த வழக்கின் மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் இந்த தடை உத்தரவு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.