நல்லவங்க வாழ்வாங்க, கொஞ்சம் நேரம் ஆகும்: வைரலாகும் நான் தாம்ப்பா பைக் திருடன்

தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசாரின் விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த சந்தோஷ் என்பவர்தான் அந்த பைக் திருடன் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து ‘நீங்கள் யார்?’ என கேள்வி கேட்டவர் இந்த சந்தோஷ் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த பைக் திருடனையும் அவனை போராளி போல் புகழ்ந்த நெட்டிசன்களையும் ரஜினி ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ‘நான் தாம்ப்பா ரஜினிகாந்த்’ என ஹேஷ்டேக் போட்டு வைரலாக்கிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுப்பது போல் தற்போது ‘நான் தாம்ப்பா பைக் திருடன்’ என்று ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மொத்தத்தில் நல்லவங்க வாழ்வாங்க, கொஞ்சம் நேரம் ஆகும் என்று ரஜினி ஒரு கூட்டத்தில் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.

Leave a Reply