நயன்தாரா பட இயக்குனரின் தந்தை மறைவிற்கு சிம்பு அஞ்சலி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சனின் தந்தை சென்னையில் காலமானார்.
நெல்சன் தந்தை மறைந்த செய்தி அறிந்த நடிகர் சிம்பு, நெல்சனின் இல்லத்திற்கு சென்று அவரது தந்தையின் அஞ்சலி செலுத்தினார். சிம்புவுடன் நடிகர் மகத்தும் சென்று மறைந்த நெல்சன் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார்.
நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படம் உருவாகுவதற்கு முன்பே அவர் ‘வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த நிலையில் ஒருசில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.
இருப்பினும் நெல்சனும் பல வருடங்களாக சிம்பு நட்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.