நயன்தாராவின் கதை அறிவு வியப்பில் ஆழ்த்தியது. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படம் நேற்று வெளியாகி சமூக இணணயதளங்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் என முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை ஒரே ஒரு நெகட்டிவ் ரிசல்ட் கூட இந்த படத்திற்கு வரவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்
இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த படமான ‘வேலைக்காரன்’ படத்தை தயாரித்துள்ள ஆர்.டி.ராஜா, ‘அறம்’ படத்திற்கு தனது வாழ்த்துக்களையும், நயன்தாராவின் திறமையை பாராட்டியும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
சிறந்த படங்களில் ஒன்று அறம். இயக்குனர் ந.கோபி நயினாருக்கு முதல் பாராட்டு. நயன்தாராவின் கதை அறிவும், உழைப்பும் வேலைக்காரனில் பணிபுரியும்போது வியப்பில் ஆழ்த்தியது. மிகச்சிறந்த நடிகையாக உச்சங்களைத் தொடுவார். ராஜேஸ் தகுதியான, மிகச் சிறந்த தயாரிப்பாளர். அறம் குழுவிற்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.