நண்பருக்கு கேன்சர்: கலெக்டருக்கு உத்தரவு போட்ட ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, தன்னிடம் உதவி என சமூக வலைத்தளங்களின் மூலம் கேட்பவர்களுக்கு உடனடியாக அவர்களுக்கு தேவையானதை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
விசாகப்பட்டினத்தில் உள்ள சில இளைஞர்கள் தங்கள் நண்பருக்கு கேன்சர் என்றும், அவரை குணப்படுத்தும் அளவுக்கு செலவு செய்ய பணம் இல்லை என்றும் சிகிச்சைக்க்கு உதவுமாறும், சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அந்த தகவலை பார்த்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் கலெக்டருக்கு கேன்சர் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்தார். தற்போது அந்த நபர் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சையை இலவசமாக பெற்று வருகிறார். இப்படி ஒரு முதல்வர் நம் மாநிலத்தில் இல்லையே என மற்ற மாநில மக்கள் ஏங்கும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.