நட்புக்காக நடிகராக மாறிய இயக்குனர் கார்த்திக் நரேன்!

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் ஒருவராகிய கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் சந்திப் கிஷான். இவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணாடி’ என்ற படத்தில் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கி வரும் படம் ‘கண்ணாடி’ படத்திற்காக ஒரு இளைஞர் தேடப்பட்டு வந்த நிலையில் கார்த்திக் நரேனை பரிந்துரை செய்ததாகவும், அதனையடுத்து கார்த்திக் நரேன் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இதே படத்தில் ‘குக்கூ’ படத்தில் நடித்த நடிகை மாளவிகா நாயரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply