நடுவானில் திடீரென தீப்பிடித்த சென்னை விமானம்: பெரும் பரபரப்பு
சென்னையில் இருந்து குவைத்துக்கு கிளம்பிய தனியார் விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த விமானத்தில் பயணம் செய்த 163 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து குவைத்துக்கு இண்டிகோ விமானம் இன்று காலை புறப்பட்டு சென்ற நிலையில் அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் சரக்கு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் அதில் பயணம் செய்த 163 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விமானத்தில் தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.