நடுரோட்டில் கவிழ்ந்த மண்ணெண்ணெய் லாரி: போட்டி போட்டு கேன்களில் பிடிக்கும் பொதுமக்கள்
மத்தியபிரதேசம் மாநில டிண்டோர் பகுதியில் மண்ணெண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று நிலைதடுமாறி திடீரென சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் டேங்கரில் இருந்த மண்ணெண்ணெய் சாலையில் கொட்டியது.
லாரியில் இருந்து கொட்டிய மண்ணெண்ணெய்யை அந்த பகுதி பொதுமக்கள் கேன்களில் பிடிக்க போட்டிப் போட்டதால் அந்த பகுதியே பெரும் பரபரப்பில் உள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.