நடிகை ஸ்ரீரெட்டியை தாக்கிய மர்ம நபர்கள் சென்னையில் பரபரப்பு
சென்னையில் தங்கி திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியை மர்ம நபர்கள் இரண்டு பேர் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களாக தமிழ், தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் வளசரவாக்கம் வீட்டில் இருந்த தன்னை 2 மர்மநபர்கள் தாக்கியதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.