shadow

நாடோடிகள் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, அடித்து காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் அனுமதியில்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், ஆகிய 5 பிரிவுகளில் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

ஆனால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்றும் சாந்தினி யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவரை தான் பார்த்ததே இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது