நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? எஸ்.ஏ.சந்திரசேகர்
முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின்னர் நடிகர்கள் பலர் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் வெகுவிரைவில் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாபநாசத்தில் மகாபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புனித நீராடினார்.. அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ‘விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் தான் விரும்புவதாகவும் அவர் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுவதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.