நகைக்காக கொலை செய்து துண்டு துண்டாக இளம்பெண்ணை வெட்டிய வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு!

கோவையில் கடந்த 2013ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் யாசர் அராபத் என்பவருக்கு தூக்குத்தண்டனை அளித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவையில் சரோஜினி என்ற பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைக்கப்பட்ட வழக்கு கடந்த சில ஆண்டுகளாக கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது

இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட யாசர் அராபத் என்பவருக்கு தூக்குத்தண்டனை அளித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

Leave a Reply