தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்: கமல்ஹாசன் வேண்டுகோள்
தன்மீது முட்டை, கல்வீசி தாக்குதல் நடத்துபவர்களுக்கு நமது கட்சி தொண்டர்கள் பதிலடி கொடுக்க வேண்டாம் என்றும் இதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் போராட்டம், கண்டனக்கூட்டம் ஆகியவை வேண்டாம் என்றும் கமல்ஹாசன் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:மக்கள் நீதி மய்யம் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே! என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.