தொடரை வெல்வது யார்? இந்தியா-இலங்கை பலப்பரிட்சை
இந்தியா, இலங்கை அணிகள் மோதிவரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே முடிந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடரை வெல்வது யார்? என்று முடிவு செய்யும் முக்கிய போட்டி இன்று நடைபெறவுள்ளது.
விசாகப்பட்டிணத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். கடந்த போட்டியில் டபுள் சென்சுரி அடித்து ருத்ரதாண்டவம் ஆடிய இவர் இன்றும் தனது முழு திறமையை காட்டி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரேரா தலைமையிலான இலங்கை அணியும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வதில் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அணிக்கு மாத்யூஸ், டிசில்வா, குணரத்னே ஆகியோர் பக்கபலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.