shadow

தொடரும் கனமழை: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை

கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து கொண்டிருப்பதால் இந்த இரு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் பள்ளிகள் இன்று இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றனர். வீடுகளை இழந்த பலர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply