தொடங்கியது சூரிய கிரகணம்: ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்

வானில் இன்று தோன்றும் அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தை காண மக்கள் ஆர்வம் கொண்டுள்ளன.
தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் சூரிய கிரகணம் இன்று காலை தெரிந்தது. திண்டுக்கல்லில் சில பகுதிகளிலும் ஊட்டியிலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது. அதேபோல் திருச்சியில் 25% பகுதி சூரிய கிரகணம் தெரிந்துள்ளது.

கர்நாடகாவின் பெங்களூருவிலும் சூரிய கிரகணத்தை காண முடிந்ததாகவும், துபாயில் முழுமையாய் வளைய வடிவ சூரிய கிரகணம் தெரிந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

சூரிய கிரகணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிறத்தில் தோன்றுவதாகவும், ஊட்டியில் சிவப்பு நிறத்திலும், ஒடிசாவில் ஊதா நிறத்திலும் கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவில் ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெவ்வேறு நிறத்திலும் சூரிய கிரகணம் தெரிகிறது என்றும் தகவல்கள் வந்துள்ளது

Leave a Reply