தேவைப்பட்டால் வழக்கு தொடர்வேன்: விஷால் அறிவிப்பு.
என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்
விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டு, பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் திடீரென மீண்டும் நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து கூறிய விஷால் வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேர்தல் ஆணையம் பதில் சொல்லியே ஆக வேண்டும், தேவைப்பட்டால் வழக்கு தொடர்வேன் என்று கூறினார்
வேட்புமனு விவகாரம் தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு சென்றாலோ அல்லது நீதிமன்றம் சென்றாலோ விஷாலுக்கு ஆதரவாகவே முடிவுகள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சட்டவல்லுனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.