தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்: பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும்படி பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது பிரச்சாரத்தின்போது பள்ளி குழந்தைகள் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கோஷம் எழுப்பியதாகவும், அந்த குழந்தைகள் பிரியங்கா காந்தி முன்னிலையில் கோஷம் போட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும் இதுகுறித்த வீடியோவும் வலைத்தளங்களில் வைரலானதால் இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம், பிரியங்கா காந்திக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply