தேர்தலை நிறுத்த தாக்கல் செய்த மனு; உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு
தமிழகத்தில் வரும் ஏப்ரல்18ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஏப்ரல் 18ஆம் தேதி “பெரிய வியாழன்” வருவதால் தமிழகத்தில் அன்றைய தேதியில் நடைபெறும் மக்களவை தேர்தலை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும், இந்த மனு மீது வரும் 8ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.