தேர்தலுக்கு நான்கே இருக்கும் நிலையில் வேட்பாளர் திடீர் தற்கொலை
பாகிஸ்தான் நாட்டில் வரும் 25ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென அந்நாட்டில் உள்ள என்.ஏ-103 என்ற பாராளுமன்ற தொகுதி மற்றும் பி.பி 103 என்ற பஞ்சாப் மாகாணத்தின் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மிர்ஷா முகமது அகமது முகல் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மிர்ஷா முகமது அகமது முகல் போட்டியிட்ட என்.ஏ-103 மற்றும் பி.பி 103 ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.