தேமுதிகவின் நிலைமையை பார்த்து பரிதாபப்படுகிறேன்: துரைமுருகன்

கடந்த சில வருடங்களுக்கு முன் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்த தேமுதிக, இன்று பரிதாபமாக தனித்துவிடப்பட்டுள்ளது

அதிக பேராசையால் இரண்டு கூட்டணியிலும் இடமின்றி கரை சேர முடியாமல் தவித்து வருகிறது

தேமுதிகவின் இன்றைய நிலை குறித்து துரைமுருகன் கூறியபோது, ‘அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்காகவே தேமுதிகவினர் என்னை பற்றி பேசுகிறார்கள் என்றும், சுதீஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார் என்றும், முருகேசன் என்னிடம் பேச எதுவும் இல்லை என்றும், விஜயகாந்த் அனுப்பியே வந்தோம் என இருவரும் கூறினார்கள் என்றும் துரைமுருகன் கூறினார்.

மேலும் தேமுதிகவின் நிலைமையை பார்த்து பரிதாபப்படுகிறேன் என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

Leave a Reply