தேசிய விருதை புறக்கணித்த திரையுலக பிரபலங்கள்: காரணம் என்ன?
தேசிய விருது என்பதே குடியரசு தலைவர் கையால் பெருவதில் தான் பெருமை என்றிருக்க, இன்று நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் ஒருசிலருக்கு மட்டுமே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடுத்ததால் 68 திரையுலக பிரபலங்கள் விருது வழங்கும் விழாவை புறக்கணித்தனர்
ஏ.ஆர்.ரஹ்மான், ஜேசுதாஸ் உள்பட 11 பேர்களுக்கு மட்டுமே குடியரசு தலைவர் விருதுகளை வழங்கினார். அதேபோல் சிறந்த நடிகை விருதை மறைந்த ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
மற்றவர்களுக்கு தேசிய விருதுகளை ஸ்மிருதி இராணி மற்றும் இணை மந்திரி விஜய் ரதோர் வழங்கினர். இந்த விழாவில் சிறந்த தமிழ்படத்திற்கான விருதை வென்ற டூலெட் பட இயக்குநர் உள்ளிட்ட 68 பேர் பங்கேற்கவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.