தமிழிசை சௌந்தரராஜனுக்கும் கொரோனாவா?

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

தெலுங்கானா ஆளுகை மாளிகையில் பணிபுரிபவர்களுக்கே கொரோனா என்பதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 33,402 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் 348 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply