தெலுங்கானாவில் மண் சரிந்து 10 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மரிக்கல் மண்டலம் திலேர் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply