shadow

தெலுங்கானாவில் பயங்கர பஸ் விபத்து: 45 பேர் பலி

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த பயங்கர பஸ் விபத்து ஒன்றில் பலியானவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் சோகம் நிலவி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று பயங்கர பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயம் அடைந்த ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் பலியான 45 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

Leave a Reply