தென்னக இரயில்வே காலியிடங்கள்: அடுத்த மாதமாவது சுதாரியுங்கள் தமிழர்களே!

சமீபத்தில் நடைபெற்ற மதுரை கோட்ட ரயில்வே காலி பணியிடங்கள் 572ல் வெறும் 10 தமிழர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. மீதியுள்ள 532 பேர்களும் வெளி மாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் அதிகளவு போட்டித்தேர்வில் கலந்து கொள்ளாததே இதற்கு காரணம் என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

இந்த நிலையில் தென்னக இரயில்வே காலிபணியிடங்களை மண்ணின் மைந்தர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற வகையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் RRB NTPC , RRC group d ஆகிய அதிக காலிபணியிடங்களுக்கு ரயில்வே தேர்வுகள் நடக்க உள்ளது. இதிலாவது சுதாரித்து அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் விண்ணப்பங்கள் செய்ய வேண்டும். இல்லையெனில் இதிலும் வட இந்தியர்களே அதிகம் ஆக்கிரமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது எனவே இப்போதே சுதாரியுங்கள் என டுவிட்டரில் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply