shadow

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை உள்ள நிலையில் சில தனியார் பள்ளிகள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Leave a Reply