shadow

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றை மதுரை ஐகோர்ட் கிளை விசாரித்து வரும் நிலையில் இன்று இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடந்தது

இன்றைய விசாரணையின்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் இறந்த வழக்கில் சிபிஐ விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் எஃப்ஐஆரில் அடையாளம் தெரியாத நபர்கள் என சிபிஐ குறிப்பிட்டது குறித்தும் அறிக்கை தர மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply